புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 Jun 2021 6:03 PM GMT (Updated: 12 Jun 2021 6:03 PM GMT)

புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 332 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 4 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 2,066 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story