மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை


மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 Jun 2021 2:43 PM GMT (Updated: 13 Jun 2021 2:43 PM GMT)

மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை.

மயிலம்,

மயிலம் அருகே உள்ள பெரமண்டூர் பெரிய கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் நாராயணசாமி (வயது 39), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள ராமதாஸ் என்பவர் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மயிலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நாராயணசாமியின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா?, அவர் எதற்காக கோபாலபுரத்திற்கு சென்றார்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story