தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு


தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 6:39 PM GMT (Updated: 13 Jun 2021 6:39 PM GMT)

ராமநாதபுரத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் நயினா முகமது என்பவரின் மகன் முகமது ஆஷாத் அலி (வயது43).தொழிலாளி. இவர் ரெகுநாதபுரத்தில் உள்ள ஓட்டலை அடைத்து விட்டு நேற்று பனைக்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் முகமது ஆஷாத் அலியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரொக்கம் ரூ.11 ஆயிரத்து 500 மற்றும் 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து முகமது ஆஷாத் அலி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story