புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Jun 2021 4:44 PM GMT (Updated: 14 Jun 2021 4:46 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து711 ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் 198 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து30அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 1,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது.

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் ஒரு பெண் கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story