சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 15 Jun 2021 5:12 PM GMT (Updated: 15 Jun 2021 5:12 PM GMT)

சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி: 

தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியை சேர்ந்த செந்தில் மகன் நரேஷ்குமார் (வயது 19). இவருக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 

நரேஷ்குமார், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் போடி தாலுகா போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள காரைக்காடு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரையும், அவருடன் இருந்த சிறுமியையும் போலீசார் பிடித்தனர்.

 விசாரணையில் அவர் நரேஷ்குமார் என்றும், சிறுமியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 


அங்கு இருந்து அவர்களை போடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சிறுமியை கடத்திய நரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது  செய்தனர்.


Next Story