புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 5:27 PM GMT (Updated: 15 Jun 2021 5:27 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை, ஜூன்.16-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர். தற்போது, தொற்று பாதிப்பு படிப்படியாக குறைகிறது.
புதிதாக 81 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 100-க்கு கீழ் குறைந்தது.
அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 181 பேர் குணமடைந்தனர். இதனால் தொற்று பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 211 ஆக உயர்ந்தது.
மேலும் 6 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களில் மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 274 ஆக உயர்ந்துள்ளது.

Next Story