விபத்தில் வாலிபர் சாவு


விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 15 Jun 2021 7:16 PM GMT (Updated: 15 Jun 2021 7:16 PM GMT)

நெல்லையில் விபத்தில் வாலிபர் பலியானார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் யாசர் (வயது 22). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக யாசர், மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யாசர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story