கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 210 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 784 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மொத்தம் 1,082 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,080 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story