விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2021 7:20 PM GMT (Updated: 16 Jun 2021 7:20 PM GMT)

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவர் கீழப்பாவூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த பரமசிவத்தை கடந்த சில நாட்களாக மது குடிக்க கூடாது என அவரது மனைவி கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியுடன் தனது சொந்த ஊரான வெள்ளகாலுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

அங்கு மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு அம்மன் கோவில் அருகில் படுத்துள்ளார். வெகுநேரமாகியும் பரமசிவம் எழுந்திருக்காததால் பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. 

தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பரமசிவம் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story