மாவட்ட புதிய கலெக்டராக மேகநாத ரெட்டி பொறுப்பேற்பு


மாவட்ட புதிய கலெக்டராக  மேகநாத ரெட்டி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 7:13 PM GMT (Updated: 17 Jun 2021 7:13 PM GMT)

விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட மேகநாத ரெட்டி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர்,ஜூன்
விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட மேகநாத ரெட்டி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 
நியமனம்
தமிழக அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கண்ணன் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டராக சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிய மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டார். 
இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மேகநாதரெட்டி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாறுதலாகிச் செல்லும் கலெக்டர் கண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் கண்ணன் அவரிடம் விடைபெற்று சென்றார்.
 பணியிடங்கள்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாத ரெட்டி கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி வரை சார் ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் 2018 செப்டம்பர் வரை நில நிர்வாகத்துறை துணை ஆணையராக பணியாற்றினார். 2018-ம் ஆண்டு செப்டம்பர்  முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரை வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றினார். 2020 மார்ச் முதல் 2021-ம் ஆண்டு மே மாதம் வரை சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமனம் பெற்றார்.

Next Story