அண்ணன்-தம்பி மோதல்; 3 பேர் கைது


அண்ணன்-தம்பி மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 9:14 PM GMT (Updated: 18 Jun 2021 9:14 PM GMT)

அண்ணன்-தம்பி மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது 80). விவசாயி. இவருடைய மகன்கள் மனோகரன்(59), இளங்கோவன் (56). இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மனோகரனுக்கு ஆதரவாக அவரது உறவினர் உத்தமராசு தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மனோகரனும், இளங்கோவனும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து மனோகரன், உத்தமராசு, மற்றொரு தரப்பில் இளங்கோவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story