காய்கறிமீன்பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்


காய்கறிமீன்பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jun 2021 7:04 PM GMT (Updated: 20 Jun 2021 7:04 PM GMT)

காய்கறி மீன் பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும்

கோவை

காய்கறி, மீன் மற்றும் பூமார்க்கெட்டுகளில் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட கலெட்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி கூறியதாவது

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. 

இதன் விளைவாக தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.

கண்காணிக்க வேண்டும்

இதனால் தளர்வுகளுடன் இயங்கும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை விரைந்து கண்டறிய விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத் தப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் மீன்மார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் கூடாமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

மாநகராட்சிக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் யாரும் உள்ளே வராமலும், தனிமைப்படுத்தப்பட்டவர் கள் வெளியில் செல்லாமலும் இருப்பதை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 

தொழிற்சாலைகளில்  தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்த வேண்டும். கோவை மாநகர பகுதியில் உள்ள 12 சோதனை சாவடிகளுடன் தற்போது, கூடுதலாக 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

முகக்கவசம் கட்டாயம்

ஊரக பகுதிகளின் அருகே நகர பகுதிகள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். 

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

திருமணம், குடும்ப நிகழ்ச்சி மற்றும் இறப்பு நிகழ்வுகளில் அரசு அறி வித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story