மேலும் 112 பேருக்கு கொரோனா


மேலும் 112 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jun 2021 7:13 PM GMT (Updated: 20 Jun 2021 7:13 PM GMT)

மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தின் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,753 ஆக உயர்ந்துள்ளது.
 இதுவரை 42,223 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 566 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,019 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 512 ஆக உயர்ந்து உள்ளது.
 படுக்கைகள்
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,448 படுக்கைகள் உள்ள நிலையில் 1,074 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் 374 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 205 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 648 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கன்னிசேரி,  ரோசல்பட்டி, குப்பாம்பட்டி, அல்லம்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3.5 சதவீத பாதிப்பு 
 மேலும் பாலையம்பட்டி, ஆத்திபட்டி, பூசாரிப்பட்டி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், திருத்தங்கல், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 நேற்று மாவட்ட பட்டியலில் 42 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 112 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆகும்.

Next Story