மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது


மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 8:16 PM GMT (Updated: 20 Jun 2021 8:16 PM GMT)

மணல் கடத்தியவா் சிக்கினாா்

கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது மேல மஞ்சக்கரையில் மாட்டுவண்டியில் ஒருவர் மணலுடன் சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர் கீழபுலவன்காட்டைச் சேர்ந்த நாகராஜன் (வயது 43) என்பதும், மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story