அரசு மருத்துவமனை தானிப்பாடி கழிவறையில் கிடந்த பெண் குழந்தை உடல்


அரசு மருத்துவமனை தானிப்பாடி கழிவறையில் கிடந்த பெண் குழந்தை உடல்
x
தினத்தந்தி 21 Jun 2021 6:14 PM GMT (Updated: 21 Jun 2021 6:14 PM GMT)

தானிப்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் குழந்தை உடல் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு

கழிவறையில் பெண் குழந்தை உடல்

தண்டராம்பட்டு அருகே தானிப்பாடியில் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை கழிவறை பகுதியில் நேற்று மாலை பெண் குழந்தை உடல் கிடப்பதாக சிலர் டாக்டர் மூவி என்பவருக்கு தகவல் கொடுத்தனர். 

அதைத்தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது 7 மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து தானிப்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா  காட்சிகள்

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை விட்டுச்சென்றவர்கள் யார் என்பது குறித்து  விசாரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மருத்துவமனை கழிவறையில் பெண் குழந்தை பிணம் கிடந்தது மருத்துவமனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story