தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Jun 2021 6:53 PM GMT (Updated: 21 Jun 2021 6:53 PM GMT)

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி கலையரசி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் மதுபழக்கம் உள்ள சண்முகம் நேற்று முன்தினம் குடிப்பதற்காக அவரது மனைவி கலையரசியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சண்முகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோனிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story