புதிதாக 106 பேருக்கு கொரோனா


புதிதாக 106 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Jun 2021 7:39 PM GMT (Updated: 21 Jun 2021 7:39 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,859 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 42,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
 நேற்று மட்டும் 264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 859 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 பேர் பலி 
நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகளில் 1,418 படுக்கைகள் உள்ள நிலையில் 350 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,109 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 185 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,668 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு 
விருதுநகர் கணேஷ் நகர், நீதிபதிகள் குடியிருப்பு, அரசு ஆஸ்பத்திரி, பெரிய பேராலி, என்.ஜி.ஓ. காலனி, பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, மம்சாபுரம், ஊரணிப்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 11 பேருக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாநிலப் பட்டியலில் 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆகும்.

Next Story