மனைவியை மிரட்டிய கார் டிரைவர் கைது


மனைவியை மிரட்டிய கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:11 PM GMT (Updated: 23 Jun 2021 7:11 PM GMT)

மனைவியை மிரட்டிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 24). இவர் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேவராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று பிரியதர்ஷினியின் வீட்டுக்கு வந்த தேவராஜ் அங்கு நின்று கொண்டிருந்த பிரியதர்ஷினியிடம் தகராறு செய்து தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து, தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story