கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:54 PM GMT (Updated: 23 Jun 2021 7:54 PM GMT)

ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் (வயது 50) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story