பாம்பு கடித்து தொழிலாளி சாவு


பாம்பு கடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Jun 2021 6:54 PM GMT (Updated: 24 Jun 2021 6:54 PM GMT)

சிங்கம்புணரி அருகே பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் தங்கியிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஹனான் முல்லா (வயது 30) என்பவரை பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். உடனே சி்ங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story