கொரோனாவுக்கு ஒருவர் பலி


கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 7:26 PM GMT (Updated: 24 Jun 2021 7:26 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 36 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 593 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 806 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,916 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story