கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2021 2:54 PM GMT (Updated: 26 Jun 2021 2:54 PM GMT)

செங்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரியகுளம் வசந்தபுரத்தை சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு (வயது 49). இவரது மகள் நதியா (18), திருவண்ணாமலை கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த நதியா கடந்த 22-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story