இளம்பெண் பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் (வயது 22), லாரி டிரைவர்.
ஆம்பூர தார்வழி பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணிடம் பழகியதாக தெரிகிறது.
அந்த இளம்பெண்ணிடம், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், என ஆசை வார்த்தைகளை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த இளம்பெண்ணின் தாயார் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தா்ா. போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story