வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 5:57 PM GMT (Updated: 29 Jun 2021 5:57 PM GMT)

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தை அடுத்துள்ள அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 24). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கார்த்திக்  சிறுமி குளிக்கும் போது படம் எடுத்து அதைவைத்து அவரை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினாராம். அதற்கு சிறுமி மறுக்கவே அந்த படத்தை வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமி வீட்டில் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story