பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை


பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 Jun 2021 6:27 PM GMT (Updated: 29 Jun 2021 6:27 PM GMT)

பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதுபோன்று முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த நிலையில் பாப்பம்பட்டியில் மில் தொழிலாளர்கள் மற்றும் சிமெண்ட் கம்பெனி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

 இதில் மொத்தம் 97 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வுக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதில் டாக்டர் பவித்ரா, ஆய்வக உதவியாளர்கள் பிரியா, வனிதா, மருந்தாளுனர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அதிகாரி வனிதா செய்து இருந்தார்.


Next Story