சூளகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி போலீசில் ஒப்படைத்தனர்


சூளகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 29 Jun 2021 7:18 PM GMT (Updated: 29 Jun 2021 7:18 PM GMT)

சூளகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சூளகிரி:

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தொட்டேப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 60). இவர் சிம்பல்திராடி-தொட்டேப்பள்ளி சாலையில், 9 வயது சிறுமி ஒருவருக்கு நேற்று மாலை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து முதியவர் கிருஷ்ணப்பாவை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். 
மேலும் இது குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
முதியவரிடம் விசாரணை
இந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த முதியவரை பிடித்து சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் சூளகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story