மு.க.ஸ்டாலினுடன் கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் சந்திப்பு


மு.க.ஸ்டாலினுடன் கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் சந்திப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:01 AM GMT (Updated: 30 Jun 2021 10:01 AM GMT)

மு.க.ஸ்டாலினுடன் கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் சந்திப்பு.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மறைந்த கவிஞர் கண்ணதாசனின் குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

இதேபோல், தமிழ்நாடு மாநில உருது அகாடமி துணைத்தலைவர் டாக்டர் முகமது நயீமூர் ரகுமானும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொன்.குமார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதேபோல், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ உமையாள்புரம் கே.சிவராமன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தான் எழுதிய “மியூசிக்கல் எக்சலென்ஸ் ஆப் மிருதங்கம்” என்ற புத்தகத்தின் பிரதியினை வழங்கினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Next Story