நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு


நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 2 July 2021 1:56 PM GMT (Updated: 2 July 2021 1:56 PM GMT)

நம்பியவர்களே துரோகம் செய்தார்கள் சசிகலா பரபரப்பு பேச்சு.

சென்னை,

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருப்பூரை சேர்ந்த ரெய்ஹானா பானு, போடியை சேர்ந்த வினித், நெல்லையை சேர்ந்த மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த ரகுமான், தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ், ராமதாஸ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வில் கட்சியில தொண்டர்கள் தேர்வு செய்பவரே தலைமைக்கு வரமுடியும். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.

நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை. நம்ம கட்சி இப்படி சீரழியுறதை பாக்க முடியல. கண்டிப்பா வந்து கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்.

கட்சியை அம்மா போல நானும் வழிநடத்துவேன். இது ஒரு சத்திய சோதனை. தொண்டர்கள் துணையோட அதை வென்று காட்டுவேன்.

இந்த கட்சிக்கு இப்போ ஒற்றுமைதான் வேணும். தலைவர்(எம்.ஜி.ஆர்.) மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன். அப்படி ஒரு நிலைமைதான் இப்போவும் ஏற்பட்டிருக்கு. இதுலயும் நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

Next Story