கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 4:43 PM GMT (Updated: 2 July 2021 4:45 PM GMT)

கஞ்சா விற்ற வாலிபர் கைது.

ஆற்காடு,

ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு சடாய்தெரு பின்புறம் முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த கணேஷ் (வயது 28) என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story