696 பேருக்கு கொரோனா தடுப்பூசி


696 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 2 July 2021 6:10 PM GMT (Updated: 2 July 2021 6:10 PM GMT)

காளையார்கோவிலில் 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து வர்த்தகர்கள், வர்த்தக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை காளையார்கோவில் நகர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடத்தியது. முகாமுக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமில் 565 வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முகாம் ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பூமிநாதன், நகர் வர்த்தக சங்க செயலாளர் செந்தில், பொருளாளர் ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story