மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 6:46 PM GMT (Updated: 2 July 2021 6:46 PM GMT)

மது விற்றவர் கைது செய்யபப்ட்டார்.

நொய்யல்
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதேபோல் தோகைமலை அருகே உள்ள கழுகூரை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி வயது (வயது 39). இவர் தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து மாரியாயி மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story