லாட்டரி விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், 52 வீட்டு காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (வயது 59) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கையில் வைத்திருந்தார். இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லாட்டரி சீட்டுக்களையும், லாட்டரி விற்ற ரூ.600-யும் பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல்-விருதுநகர் மெயின் ரோட்டில் சுப்புராஜன் (59) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story