சிப்காட் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு


சிப்காட் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 July 2021 2:17 PM GMT (Updated: 3 July 2021 2:17 PM GMT)

சிப்காட் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி, சிப்காட் பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளேரி ஆகிய 3 இடங்களில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை இன்சூரன்சு செய்யாதது, என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story