வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 July 2021 7:22 PM GMT (Updated: 3 July 2021 7:22 PM GMT)

மானூர் அருகே வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசமானது.

மானூர்:
மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தனம் (வயது 40). கூலி தொழிலாளியான இவரது வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story