மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது


மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 7:37 PM GMT (Updated: 3 July 2021 7:37 PM GMT)

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராசு (வயது 50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கோவிந்தராசுவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story