சேலம் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா 3 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
x
தினத்தந்தி 3 July 2021 7:56 PM GMT (Updated: 3 July 2021 7:56 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிதாக 251 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்,
251 பேருக்கு பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 251 பேருக்கு மட்டுமே நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 36 பேர், எடப்பாடியில் 10 பேர், காடையாம்பட்டியில் 2 பேர், கொளத்தூரில் 7 பேர், கொங்கணாபுரத்தில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 3 பேர், மேச்சேரியில் 18 பேர், நங்கவள்ளியில் 10 பேர், ஓமலூரில் 10 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 4 பேர், சங்ககிரியில் 3 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், வீரபாண்டியில் 12 பேர், ஆத்தூரில் 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 4 பேர், கெங்கவல்லியில் 1 பேர், பனமரத்துப்பட்டியில் 1 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 4 பேர், தலைவாசலில் 4 பேர், வாழப்பாடியில் 4 பேர், மேட்டூர் நகராட்சியில் 7 பேர், நரசிங்கபுரம் நகராட்சியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 13 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 10 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 11 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 12 பேர், திருச்சியில் இருந்து வந்த 10 பேர், கடலூரில் இருந்து வந்த 8 பேர், புதுக்கோட்டையில் இருந்து வந்த 4 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 11 பேர், சென்னையில் இருந்து வந்த 8 பேர், விழுப்புரத்தில் இருந்து வந்த 3 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
412 பேர் டிஸ்சார்ஜ்
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், மாவட்டத்தில் இதுவரை 85 ஆயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 412 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,490 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக அதிகரித்துள்ளது.

Next Story