பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
x

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மு.முத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 48). இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராதாகிருஷ்ணன்(50) குடும்பத்திற்கும் இடையே விவசாய நிலத்தில் எல்லை சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கஸ்தூரியின் வீட்டிற்கு வந்த ராதாகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் அவரது கணவர் அரியமுத்து ஆகியோரது பெயரைச்சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. ஏன் திட்டுகிறாய் என்று ராதாகிருஷ்ணனிடம், கஸ்தூரி கேட்டதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கஸ்தூரியை, ராதாகிருஷ்ணன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கஸ்தூரி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story