திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 102 பேர் பாதிப்பு - 3 பேர் சாவு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 102 பேர் பாதிப்பு - 3 பேர் சாவு
x
தினத்தந்தி 4 July 2021 2:42 AM GMT (Updated: 4 July 2021 2:42 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 102 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று கொரோனா தொற்றால் 3 பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 701 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 922 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,713 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர்.

Next Story