குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம்


குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 4 July 2021 6:33 PM GMT (Updated: 4 July 2021 6:33 PM GMT)

குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தரகம்பட்டி
தரகம்பட்டியில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து நடத்தும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். சமூக நலத்துறை கீழ் செயல்படும் மகளிர் சக்தி கேந்திரா நல அலுவலர் சங்கீதா, பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வரவேற்று பேசினார். முகாமில் பெண்கள் மற்றும் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, கடவூர் வாழ்வார்மங்கலம், சின்னான்டிபட்டி, காளயாப்பட்டி, தரகம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story