மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு


மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 July 2021 7:22 PM GMT (Updated: 6 July 2021 7:22 PM GMT)

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், அவருடைய உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் தாதம்பேட்டையை சேர்ந்த ராமதாசின் மகன் ராஜேஷ்(வயது 30) மொபட்டில் மணல் கடத்தி வந்ததாகவும், கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் மணல் மூட்டைகளையும், மொபட்டையும் அங்கேயே விட்டுவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து மொபட்டையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

Next Story