82 மதுபாட்டில்கள் பறிமுதல்


82 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 July 2021 8:20 PM GMT (Updated: 6 July 2021 8:20 PM GMT)

தளவாய்புரத்தில் 82 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தளவாய்புரம், 
தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் செட்டியார்பட்டி- முகவூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்த கைலாசம் (வயது 50) என்பவர்  ஒரு பையில் 82 மது பாட்டில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story