மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு தூங்கியபோது பரிதாபம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு தூங்கியபோது பரிதாபம்
x

ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு தூங்கியபோது பரிதாபம்.

படப்பை,

அசாம் மாநிலம் பங்சியபரா பகுதியை சேர்ந்தவர் ஜியாருல்மியா (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல வேலை முடிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். தனது அறையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் ஜியாருல்மியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story