பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 July 2021 5:35 PM GMT (Updated: 7 July 2021 5:35 PM GMT)

பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச்சென்றுவிட்டார்.

காரைக்குடி, 
சாக்கோட்டை போலீஸ் சரகம் கீழ வேதியங்குடி மேல தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி நிஷாந்தி (வயது 29). சந்திரசேகர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது முகமூடி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் 5 பவுன் நகை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டான். 
இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story