சென்னை ஐ.ஐ.டி. இடஒதுக்கீடு பிரச்சினை விவகாரம்: சமூகநீதி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்


சென்னை ஐ.ஐ.டி. இடஒதுக்கீடு பிரச்சினை விவகாரம்: சமூகநீதி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2021 4:18 AM GMT (Updated: 8 July 2021 4:18 AM GMT)

சென்னை ஐ.ஐ.டி. இடஒதுக்கீடு பிரச்சினை விவகாரம்: சமூகநீதி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த சில நாட்களாக பலரால் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சமூகநீதி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் நிறுவனர் ஏ.கே.அம்பேத்கர்தாசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story