கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் ஒரே நாளில் 57 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 39 ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 736 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 311 ஆக உள்ளது.

Next Story