பாபநாசம் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
பாபநாசம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம்,
பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது 42). விவசாயி. வெளிநாடு சென்று வந்த இவர் நேற்றுமுன்தினம் கபிஸ்தலம் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பி்ன்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ராயபுரம் தட்டுமால் படுகை கிராமத்தில் உள்ள திருமலை ராஜன் ஆற்றங்கரை அருகில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி சரண்பிரியா (30) பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story