திருவள்ளூரில் பாம்பு கடித்து தொழிலாளி சாவு
திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் காக்களூர் பகுதியில் பேப்பர் ஏஜென்டாக உள்ளார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (32) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக ராஜாஜிபுரம், புத்துகோவில் அருகே சென்றபோது. அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதைத்தொடர்ந்து அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே சிறிது நேரத்தில் அவர் வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்து போனார்.
இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story