மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 11 July 2021 3:47 PM GMT (Updated: 11 July 2021 3:47 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). விவசாயி. இவர், கடந்த 7-ந்தேதி இரவு அவருடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.


 அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ்நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story