மின்சார ரெயிலில் ரெயில் என்ஜின் டிரைவரிடம் செல்போன் பறிப்பு வாலிபர் கைது


மின்சார ரெயிலில் ரெயில் என்ஜின் டிரைவரிடம் செல்போன் பறிப்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 1:14 PM GMT (Updated: 13 July 2021 1:14 PM GMT)

மின்சார ரெயிலில் ரெயில் என்ஜின் டிரைவரிடம் செல்போன் பறிப்பு வாலிபர் கைது.

சென்னை,

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் மாத்ருபூதம். இவர் தெற்கு ரெயில்வேயில் மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, மாத்ருபூதம், மின்சார ரெயிலில் கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

ரெயில் பூங்கா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அவர் பயணித்த பெட்டியில், அவருக்கு பின்னால் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென அவரது செல்போனை பறித்துவிட்டு, ரெயிலில் இருந்து கீழே குதித்து ஓடிவிட்டார்.

இதைக்கண்ட அங்கிருந்த போலீசார் ஓடி சென்று, அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 32) என்பது தெரியவந்தது.மேலும் இவர் மீது பூக்கடை போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையத்தில், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story