செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 130 பேர் பாதிப்பு 3 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 130 பேர் பாதிப்பு 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 July 2021 4:58 AM GMT (Updated: 16 July 2021 4:58 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 130 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர், 

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 380- ஆக உயர்ந்துள்ளது. இதில் 1116 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 -ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200- ஆக உயர்ந்துள்ளது. 455 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story